For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுதந்திர தின தேநீர் விருந்து - ஆளுநர் அழைப்பை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ஆளுநர் ரவியின் தேநீர் விருந்து அழைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
06:13 PM Aug 14, 2025 IST | Web Editor
ஆளுநர் ரவியின் தேநீர் விருந்து அழைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார் இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தின தேநீர் விருந்து   ஆளுநர் அழைப்பை புறக்கணித்த முதலமைச்சர்  ஸ்டாலின்
Advertisement

Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ரவி நாளை (ஆகஸ்ட் 15) ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்துக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநரின் இந்த அழைப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதற்கான காரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தெரிவிக்கவில்லை. எனினும், கடந்த சில மாதங்களாகத் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள்தான் இதற்குக் காரணமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. குறிப்பாக, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உட்படப் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆளுநர் ரவி, சில பொது நிகழ்ச்சிகளில் அரசியல் ரீதியான கருத்துகளைப் பேசியதாகவும், அவை மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுவும் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே உள்ள பிளவை அதிகப்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு வலுவான எதிர்ப்பு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்லாமல், கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தன.

இந்த நிகழ்வு, மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே உள்ள மோதலை மேலும் வலுப்படுத்தியுள்ளது

Tags :
Advertisement