For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிகரிக்கும் கோடை வெயில் : தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் - மே.வங்கம், ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

08:45 AM Apr 28, 2024 IST | Web Editor
அதிகரிக்கும் கோடை வெயில்   தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்   மே வங்கம்  ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Advertisement

அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல  மே.வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது.  மேலும் வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அதிகமான நீர்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாரும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமான ஈரோட்டில் வெயில் 107டிகிரியை கடந்து வருவதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்ளவு சிறிய அளவில் குறைந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் அந்த மாநிலங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Tags :
Advertisement