For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சீரற்ற வானிலை | டெல்லி-நரிடா விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா!

09:50 PM Aug 15, 2024 IST | Web Editor
சீரற்ற வானிலை   டெல்லி நரிடா விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
Advertisement

டெல்லி-நரிடா வழித்தட விமானங்களில் உறுதிசெய்யப்பட்ட முன்பதிவுகளைக் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக ஏர் இந்தியா, டெல்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுடெல்லி - நரிட்டா வழித்தட விமானங்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் மறு திட்டமிடலில் ஒரு முறை சலுகையும், விமான சேவை ரத்தானதற்கான முழு பணத்தைத் திரும்பப் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக புதுடெல்லி - நரிட்டா - புதுடெல்லி வழித்தடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஏஐ 306 மற்றும் ஏஐ 307 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement