For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் கடந்துவிட்டோம்” - நடிகர் பரத் பேச்சு!

07:10 AM Aug 29, 2024 IST | Web Editor
“வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் கடந்துவிட்டோம்”   நடிகர் பரத் பேச்சு
Advertisement

“தமிழ் சினிமாவில்  வாரிசு நடிகர்களின் காலத்தை நாம் கடந்துவிட்டோம் திறமை இருந்தால் வெற்றிப் பெறலாம்” என நடிகர் பரத் தெரிவித்துள்ளார். 

Advertisement

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடிகர் பரத், நடிகை அபிராமி, பவித்ரா
லட்சுமி, நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “ஒன்ஸ்
அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ்” படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் பரத் பேசியதாவது;

வாரிசு நடிகர்கள் காலத்தை நாம் தாண்டிவிட்டோம். தமிழ் சினிமாவில் திறமை
இருந்தால் வெற்றி பெறலாம். எனக்கு எந்த பேராசையும் இல்லை. முதலில் நாம் நம்மை சந்தோஷமாக வைத்துக் கொண்டாலே இளமையாக இருக்கலாம். ஹேமா கமிட்டி பற்றிய கேள்விக்கு, அதற்கான மேடை இது இல்லை” என தெரிவித்தார்.

ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் கேப்டன் எம் பி ஆனந்த் தயாரிப்பில்  ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பாலா ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் சி ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்துள்ளார்.

சென்னையை மையமாக வைத்து இப்படத்தின் நகர்வு இருப்பதால் ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மெட்ராஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இப்படம் வரும் செப்.26ஆம் தேதி வெளியாகும் நிகழ்ச்சியில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement