For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்தியாவுக்கே உலகக்கோப்பை: மம்தா பானர்ஜி பேச்சு!

04:29 PM Nov 23, 2023 IST | Web Editor
கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தால் இந்தியாவுக்கே உலகக்கோப்பை  மம்தா பானர்ஜி பேச்சு
Advertisement

கிரிக்கெட் உலகக் கோப்பை கொல்கத்தா அல்லது மும்பையில் நடைபெற்றிருந்தால் இந்தியா கண்டிப்பாகக் கோப்பையை வென்றிருக்கும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Advertisement

நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சித் தொண்டர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி கூறியதாவது:

“பாஜக இந்திய கிரிக்கெட் அணியைக் காவிமயமாக்க முயற்சி செய்துவருகிறது. இந்திய அணியை மட்டுமல்லாமல் மொத்த இந்தியாவையும் காவிமயமாக்க முயற்சி செய்கிறார்கள். இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் மீது நாங்கள் பெருமை கொள்கிறோம், போட்டியை கொல்கத்தா அல்லது மும்பையில் நடத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக கோப்பையை ஜெயித்திருப்பார்கள்.

மேலும், பாஜக விளையாட்டு வீரர்களுக்கு காவிநிறப் பயிற்சி உடைகளை வழங்கியது. ஆனால் அதை போட்டுக் கொள்ள வீரர்கள் மறுத்துவிட்டனர். பாவம் செய்பவர்கள் எங்கு சென்றாலும், பாவங்களை உடன் எடுத்துச்செல்கிறார்கள். இந்தியா விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் பாவம் செய்தவர் பார்வையாளராக வந்ததால் உலகக்கோப்பைப் போட்டியில் மட்டும் இந்தியா தோற்றுப்போனது.” என தெரிவித்தார்.

இதே போல், தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, பிரதமர் மோடி வருகையால் உலகக்கோப்பையில் தோற்றுவிட்டது எனக் கூறினார். இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

Tags :
Advertisement