For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"இரவு பகலாக படித்து ஐபிஎஸ் பதவியை பெற்றேன்" - சீமானுக்கு #VarunKumar எஸ்.பி பதில்!

10:28 AM Aug 26, 2024 IST | Web Editor
 இரவு பகலாக படித்து ஐபிஎஸ் பதவியை பெற்றேன்     சீமானுக்கு  varunkumar எஸ் பி பதில்
Advertisement

தான் வகிக்கும் ஐபிஎஸ் பதவி என்பது கடினமாக இரவு பகலாக படித்து பெற்றது என திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்.பி வருண் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூ டியூபருமான சாட்டை துரைமுருகன் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்தக் கட்சியை சேர்ந்த சிலர் எக்ஸ் சமூக வலைதளத்தில் எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரை பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் எக்ஸ் வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாகவும், இது போன்று அவதூறு பரப்புகிறவர்களையும், அதனை தூண்டுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தப் போவதாகவும் எஸ்பி வருண்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதையும் படியுங்கள் :#ArmstrongMurderCase – சிறையிலிருந்த திருமலை நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

இதற்கிடையே, தானும், புதுக்கோட்டை எஸ்பியாக உள்ள தனது மனைவி வந்திதா பாண்டேவும், எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வருண் குமார் அறிவித்தார். இந்நிலையில், ”நான் வகிக்கும் ஐபிஎஸ் மற்றும் எஸ்.பி பதவி என்பது திரள் நிதியிலோ, யாசகம் பெற்றோ வந்தது அல்ல. கடினமாக உழைத்து, இரவு பகலாக படித்து, ரத்தம் வியர்வை சிந்தி, சொந்த உழைப்பில் வாங்கிய வேலை” என்று ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

Tags :
Advertisement