For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன் - அருண் நேரு!

03:30 PM Feb 23, 2024 IST | Web Editor
தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பேன்   அருண் நேரு
Advertisement

மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும், எந்த தொகுதியில் போட்டி என்பதை தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு துறை சார்பில் ஆய்வு மாளிகை திறப்பு விழா திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே இன்று (பிப். 23) நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தேதி அறிவித்த பிறகு இது குறித்து தெரிவிப்பதாகவும், வெற்றி உறுதி, இது அனைவரும் அறிந்ததே என தெரிவித்தார். மேலும் தலைமை என்ன சொல்கிறதோ அதுதான் இறுதி முடிவு என்றும் அருண் நேரு கூறினார்.

Tags :
Advertisement