"மதுரையில் அசைவ உணவை நான் இன்னும் சாப்பிடவில்லை" - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி!
நடிகர் சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மாமன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்
ஐஸ்வர்யா லட்சுமி சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவருடன் ரசிகர்கள், பெண்கள் புகைப்படங்கள் எடுத்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐஸ்வர்யா லட்சுமி கூறுகையில், "என்னுடைய இரண்டாவது திரைப்படம் மாயாநதி படத்தில் நடிக்கும் போது இருந்து மதுரை வருகிறேன். அந்த படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் துவங்கியது. என் அனைத்து படங்களின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். 21 ஆம் தேதி முதல் என் புதிய படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
அதற்காக தான் தற்போது மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். மாமன் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. அது ஒரு குடும்ப படம்
அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். தமிழ் திரையுலகில் தான் எனக்கு அதிகமான வாய்ப்புகள் வருகிறது. தமிழில் தான் நிறைய படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
தஃக் லைஃப் ட்ரைலர் நேற்று வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் திரைப்பட போல உள்ளது. மதுரை எனக்கு மிகவும் பிடிக்கும் மீனாட்சியம் அம்மாவை எனக்கு பயங்கரமா பிடிக்கும். மதுரைக்கு வருவது ரொம்ப பிடிக்கும், மதுரைக்கு வந்து திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும்.
நான் வெஜிடேரியன் மதுரை எப்போது வந்தாலும் கோவிலுக்கு தான் அதிகமாக செல்ல முடியும். மதுரையில் அசைவ உணவு நான் இன்னும் சாப்பிட்டது கிடையாது. சைவ உணவு தான் சாப்பிட்டிருக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.