Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இவ்வளவு செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?” - இபிஎஸ்-ன் பதிவுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில்!

06:22 PM Mar 06, 2024 IST | Web Editor
Advertisement

'நீங்கள் நலமா' எனும் திட்டம் இன்று துவங்கப்பட்ட நிலையில், 'நாங்கள் நலமில்லை' என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

திமுக ஆட்சி அமைந்ததில்  இருந்து தொடங்கப்பட்ட திட்டங்களின் பலன்கள் பயனாளர்களை சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யும் வகையில், “நீங்கள் நலமா?” என்ற புதிய திட்டத்தை இன்று (மார்ச் 6) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனை விமர்சிக்கும் விதமாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,  “நீங்கள் நலமா” என்று கேட்கும் முதலமைச்சர் ஸ்டாலின் - நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு! சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை! நாங்கள் நலமாக இல்லை.” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில், “எதிர்க்கட்சித் தலைவர் தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்! விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

பதவியைக் காப்பாற்றுவதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? தூத்துக்குடியில்  மக்களைக் குருவிகளைப் போல சுட்டுத் தள்ளிய ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? பொள்ளாச்சி இளம்பெண்களை சீரழித்த கொடூரன்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான CAAவுக்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?

கொரோனாவில் ப்ளீச்சிங் பவுடர் வரை கொள்ளையடித்து ஆட்சி நடத்திய நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? கட்சித் தலைவி வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலையும் கொள்ளையும் நடக்க விட்ட நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “உங்களின் இருண்ட ஆட்சியிலிருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் இன்றும் என்றும் நலமாகவே இருப்பார்கள், திராவிட மாடல் ஆட்சியில்” எனவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Tags :
நீங்கள் நலமாAIADMKCMO TamilNaduDMKedappadi palaniswamiMK StalinNeengal NalamaNews7Tamilnews7TamilUpdatesTRB Rajaa
Advertisement
Next Article