For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் - தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!

03:53 PM Jan 27, 2024 IST | Web Editor
ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள்   தொல்லியல் துறையின் முக்கிய தகவல்
Advertisement

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே இந்து கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில் இந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

தொடர்ந்து நவ.28-ம் தேதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மாவட்ட நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.  இந்த காலக்கெடு கடந்த செவ்வாயன்று (நவ.28) முடிவடைந்த நிலையில், தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் கிடைத்த பல்வேறு தரவுகளை பகுத்தாய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொல்லியல் துறையினரால் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க முடியாத சூழல் உள்ளது.

இதனையடுத்து அறிவியல் பூர்வ ஆய்வு முடிவு அறிக்கையை சமர்ப்பிக்க, மேலும் 3 வாரம் கூடுதல் கால அவகாசம் கோரி, நவ.28 அன்று, இந்திய தொல்லியல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம், ஞானவாபி மசூதியில் மேற்கொண்ட அறிவியல் பூர்வ ஆய்வு முடிவு அறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு மேலும் 10 நாள்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்தது`. இதையடுத்து, தொல்லியல் துறையின் ஆய்வு நடந்து, கடந்த ஆண்டு டிச., 18ல் ஆய்வறிக்கை, சீலிட்ட உறையில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், தேவையில்லாத குழப்பங்கள், பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக, தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக ஆய்வு செய்த மாவட்ட நீதிமன்றம், நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, இந்த அறிக்கையை, வழக்கில் தொடர்புடைய, இந்து மற்றும் முஸ்லிம் என, இரு தரப்புக்கும் வழங்க உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை, இந்து அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “தற்போது ஞானவாபி வளாகம் அமைந்துள்ள இடத்தில், ஏற்கனவே மிகப்பெரிய இந்து கோயில் இருந்ததற்கான சாட்சியங்கள், தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த இந்து கோயிலின்` துாண்களில் சிறிய மாற்றங்கள் செய்து, அதன்மீது கட்டுமானங்களை எழுப்பி ஞானவாபி வளாகத்தை கட்டமைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானவாபி வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், ஏற்கனவே இருந்த இந்து கோயிலின் ஒரு பகுதி என்றும் தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து கோயிலில் பயன்படுத்தப்பட்ட சிலைகள், அங்குள்ள நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதையும் அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.இந்த ஆய்வில், இந்து கோயிலில் இருந்த கல்வெட்டுகளில் தேவனகரி, தெலுங்கு, கன்னடம், கிராந்தி உட்பட 32 வகையான எழுத்துகள் இருந்ததையும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த எழுத்துகளின் வாயிலாக ஜனார்த்தனா, ருத்ரா, உமேஸ்வரா ஆகிய மூன்று இந்து கடவுள்களின் பெயர்களும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement