Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்ய சிங் திடீர் ராஜிநாமா!

12:02 PM Feb 28, 2024 IST | Web Editor
Advertisement

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்து ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், இமாச்சல பிரதேசம் அமைச்சர் பதவியை விக்ரமாதித்ய சிங் ராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரேயொரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 25 எம்.எல்.ஏ.-க்களை கொண்ட பாஜக நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் காங்கிரஸ் மெஜாரிட்டியை இழந்தது என பாஜக கூறியது.

அத்துடன் இன்று (பிப். 28) பாஜக முன்னாள் முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் ஆளுநர் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் இமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்யா சிங் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார். எம்.எல்.ஏ.-க்களை கட்சி மதிக்கவில்லை என விக்ரமாத்தியா சிங் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 6 பேரை பாஜக ஹரியானாவிற்கு கடத்திச் சென்றதாக அந்த மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
BJPCongressHarsh Mahajanhimachal pradeshNews7Tamilnews7TamilUpdatesVikramaditya Singh
Advertisement
Next Article