Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
09:54 AM Jun 15, 2025 IST | Web Editor
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனது. இந்த நிலையில் குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது.

Advertisement

அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உட்பட 6 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில்  5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்திற்கு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறி சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 12-ம் தேதி நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
AirIndiaFlightCrashGujarathelicopterhelicopter crashKedarnathUttarakhand
Advertisement
Next Article