For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்” - வானிலை ஆய்வுமையம் தகவல்...

07:17 AM Dec 15, 2023 IST | Web Editor
“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்”   வானிலை ஆய்வுமையம் தகவல்
Advertisement

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் டிச.16 மற்றும் 17 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றில்நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களிலும், நாளை (டிச. 16) பெரும்பாலான இடங்களிலும், வரும் 17-ம் தேதி தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் 18-ம் தேதி சில இடங்களிலும், வரும் 19, 20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement