For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனமழையால் இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து - 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
09:25 AM May 20, 2025 IST | Web Editor
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கனமழையால் இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து   19 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Advertisement

தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. கடந்த 2024-ம் ஆண்டு உலக நாடுகளுக்கு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் தங்கம் ஏற்றுமதி ஆனது.

Advertisement

இந்தநிலையில் மேற்கு பப்புவா மாகாணம் ஏர்பாக் மலைப்பகுதி அருகே சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுரங்கத்தில் உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்த்துள்ளனர்.

இதனிடையே நேற்று வடக்கு பப்புவாவில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது சட்டவிரோத தங்க சுரங்கத்துக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. அப்போது தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்து கொண்டிருந்த சமயத்தில் அந்த சுரங்கம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது.

இதில் தங்க சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 20-க்கும் மேற்பட்டோரை மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சுரங்கத்தில் இருந்து உயிரிழந்த 6 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement