For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

01:54 PM Jul 14, 2024 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிவிடி காட்சிகளை, சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தேசிய தலைவர்கள் உள்ளிட்ட ராகுல் காந்தி, ஜே.பி.நட்டா, மாயாவதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தொடங்கியது. இந்த கொலையில் தொடர்புடைய பொன்னை பாலு, திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை காவலில் எடுத்து காவல்துறையினர் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவரை காவல் துறையினர், ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, மாதவரம் வெஜ்டேரியன் நகரில் காவல் துறையினரை தாக்கிவிட்டு அதிகாலை 5 மணி அளவில், அவர் தப்ப முயன்றதாக கூறி காவல் ஆய்வாளர் முகமது புகாரி துப்பாக்கியால் சுட்டார். இதனால் திருவேங்கடம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்தற்போது வெளியாகியுள்ளது. அதில் கொலையாளிகள் வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வது பதிவாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி தற்போது என்கவுன்டரில் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த சிசிடிவி காட்சிகளும் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.youtube.com/live/Y47yxcNW85Q?si=-aWlyCUI_sBeQpHZ

Tags :
Advertisement