Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#GunShot | அமெரிக்காவில் பயங்கரம்… 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

03:31 PM Sep 06, 2024 IST | Web Editor
Advertisement

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயமடைந்தனர்.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுபோன்ற சம்பவம் ஒன்று மீண்டும் நடந்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 14 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இந்த தாக்குதலில் 2 ஆசிரியர்கள், 2 மாணவர்க என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய மாணவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் கோல்ட் கிரே என அடையாளம் காணப்பட்டார்.

அந்த சிறுவனின் தந்தை கொலின் கிரே கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, மகன் கோல் கிரேக்கு அரை தானியங்கி துப்பாக்கி ஒன்றை பரிசாக அளித்ததும், அந்த துப்பாக்கியை வைத்து சிறுவன் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சிறுவனிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிஸும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags :
AmericaArrestdeathgun shotSchool
Advertisement
Next Article