For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் - தவெக ஆனந்த் வலியுறுத்தல்!

நடந்து முடிந்துமுடிந்த குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
09:34 PM Jul 17, 2025 IST | Web Editor
நடந்து முடிந்துமுடிந்த குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
குரூப்   4 தேர்வினை ரத்து செய்துவிட்டு  மறு தேர்வு நடத்த வேண்டும்   தவெக ஆனந்த் வலியுறுத்தல்
Advertisement

கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறுத்தேர்வு நடத்துமாறு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

”தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,395 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி - 4 தேர்வினை, கடந்த 12ஆம் தேதி நடத்தியது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எழுதினர். இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் தமிழ் மொழிப் பகுதிக்கான கேள்விகள் மிகக் கடினமாகக் கேட்கப்பட்டதாகத் தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ் வினாக்கள், அறிவிக்கையின் போது தெரிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தரத்திற்கு மேலான பட்டப் படிப்புத் தரத்திலும் ஆராய்ச்சித் தரத்திலும் கேட்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் வழியில் பத்தாம் வகுப்புத் தரம் அளவில் தொகுதி - 4 தேர்விற்குத் தயாராகி இருந்த தேர்வர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வழியில் பயின்றவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி, தேர்வர்களுக்கு நீதி வழங்கத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்”

என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement