For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

09:58 PM Nov 27, 2023 IST | Web Editor
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு   விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது.

வரும் ஜனவரி மாதம் 7-ம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு, நவ. 1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அதில் சென்னை மாநகராட்சியில் 86 பணியிடம், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144, தொடக்கக் கல்வித் துறையில் 78 என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பம் பதிவேற்ற நவ.30-ம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில், டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement