உத்தரகண்ட்டில் அமலுக்கு வந்தது பொது சிவில் சட்டம்!
உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி அம்மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது.
இந்த நிலையில் புஷ்கர் சிங் தாமி தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதோடு இச்சட்டதிற்கான இணையதளத்தையும் வெளியிட்டார். இத்திட்டமானது அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு மற்றவர்களுக்கு பொருந்தும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பேசியதாவது,
“பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழ், அரசு இன்று உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இன்று இந்த மாநில மக்களுக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரு சிறப்பு நாள். உத்தராகண்டிலிருந்து இத்திட்டம் அமலுக்கு வந்ததுபோல் எதிர்காலத்தில் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று நம்புகிறேன்”
இவ்வாறு உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.