For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மன்னிப்பு கேட்ட கவுதம் வாசுதேவ் மேனன் " - ரசிகர்கள் அதிர்ச்சி..!

07:40 AM Nov 24, 2023 IST | Web Editor
 மன்னிப்பு கேட்ட கவுதம் வாசுதேவ் மேனன்     ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement

திட்டமிட்டபடி துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட முடியாததால் அதன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,  விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.  இந்தப் படத்தில் ரிது வர்மா,  பார்த்திபன்,  ராதிகா,  விநாயகன்,  திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.  ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த படத்தை இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.


துருவ நட்சத்திரம் திரைப்படத்தை திட்டமிட்டபடி இன்று வெளியிட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்திருந்தது. நிபந்தனைகளை செய்ய தவறும் பட்சத்தில் படத்தை வெளியிட தடை விதிப்பதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனிடையே நடிகர் சிம்பு நடிப்பில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் போட்டு, ரூ. 2.40 கோடியை பெற்ற கௌதம் மேனன் படத்தை முடிக்கவில்லை எனவும், பணத்தையும் திருப்பித் தரவில்லை எனவும் ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். மேலும் பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்கு தடைக்கோரி கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், பணத்தை திருப்பி அளிக்காமல் படத்தை வெளியிடமாட்டோம் எனவும் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை இன்று காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் எனவும், காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது எனவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இது குறித்து கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்ததாவது..

“ 'மன்னிக்கவும். ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் படத்தை திரையிட இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது;

உலகெங்கிலும் முறையான முன்பதிவுகள் மற்றும் சரியான திரையிடல்கள் மூலம் உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தர விரும்புகிறோம். இந்த திரைப்படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அது எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் மீண்டும் வருவோம் “ என கவுதவ் வாசுதேவ் மேனன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement