அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவராக கௌரவ் கோகோய் பதவியேற்பு!
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், செவ்வாய்க்கிழமை அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றார். கவுகாத்தியில் உள்ள கட்சியின் தலைமையகமான ராஜீவ் பவனில், இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவராக பதவியேற்றபின் பேசிய அவர், “எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அசாமில் நீதி, ஒற்றுமை மற்றும் அமைதிக்காக நிற்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசை மீண்டும் கொண்டுவருவதே எங்கள் நோக்கம்” என்று கௌரவ் கோகோய் கூறினார்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிபிபி தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் மற்றும் அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.