For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம்” - பாமக நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சு!

இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம் என பாமக நிர்வாகிகளிடையே அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
07:33 PM May 31, 2025 IST | Web Editor
இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம் என பாமக நிர்வாகிகளிடையே அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
”இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம்”   பாமக நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் பேச்சு
Advertisement

இரண்டாவது நாளாக இன்று(மே.31) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் உடன் ஆலோசனை செய்தார். இன்று காலை சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. மாலை அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, ஜெயங்கொண்டம், ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

Advertisement

மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடையே அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,  “கட்சி துவங்கி 36 ஆண்டுகள் ஆகிறது. ராமதாஸ் நமது குலசாமி. தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி வர வேண்டும். 2016ம் ஆண்டு மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்று துவங்கினோம். பிரச்சாரம் வெற்றி பெற்றது. ஆனால் நாம் வெற்றி பெற முடியவில்லை. 45 நாட்களில் நாம் நடத்திய மாநாட்டால் ஆளும் கட்சி பயந்து விட்டது.

இன்றைய தமிழ்நாட்டின் அரசியலில் நம்மை விட்டால் வேறு யாரும் கிடையாது. வருகின்ற தேர்தலுக்கு 10 மாதம் இருக்கிறது. நம்முடைய இலக்கு, ராமதாஸின் இலக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் கட்சியாக வர வேண்டும். சமுதாயங்களுக்கு எல்லாம் சமூக நீதி வேண்டும். சமூக நீதி நமது உயிர் மூச்சு கொள்கை. சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் முதலில் சாதிவாரிய கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.

இன்னும் மூன்று வாரத்தில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அதிக குழப்பங்கள் உள்ளது. விரைவில் அனைத்தையும் போக்கி விடுவேன். யாரை மாற்றினாலும் செல்லாது. நான் கொடுக்கும் கடிதம் தான் செல்லும். இது தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. என்னுடைய மனதிற்குள் அதிகம் உள்ளது. என்னுடைய அமைதி என்னுடைய பலவீனம் கிடையாது. நீங்கள் தைரியமாக வேலை செய்யுங்கள். வரும் காலம் நம்முடைய காலம்.

இங்க பாருங்க என்னுடைய அடையாள அட்டையில் ராமதாஸ் படம் தான் உள்ளது. அவர் நமது குலசாமி. எவ்வளவு திட்டங்கள் இருக்கிறது. இவ்வளவு நாள் என்னால் செய்ய முடியவில்லை. இனிமேல் எல்லாமே ஃபிரீயாக செய்யலாம். நம்முடைய நோக்கம் லட்சியம் தமிழ்நாட்டின் வளர்ச்சி. இன்னும் எத்தனையோ போராட்டங்கள் செய்ய நாம் தயாராக இருக்கிறோம். உறுப்பினர்கள் சேர்க்கவும், கிளையை புதுப்பிக்கவும், வாக்குசாவடி உறுப்பினர்கள் சேர்க்கவும். உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் போதும். பொய்யான உறுப்பினர்கள் சேர்க்க வேண்டாம்.

மாவட்டங்களில் போட்டி இல்லாமல் உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்க்கவும். அதிக உறுப்பினர்கள் சேர்த்தால் மோதிரம், செயின் போடுவேன் என்றும் நினைத்தால் நான் போட மாட்டேன். உறுப்பினர் சேர்க்கை குறித்து ஒவ்வொரு வாரம் எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றார். மேலும்
ராமதாஸால் நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன கடிதம் வழங்கினார்.  அத்துடன் மாவட்ட செயலாளர்கள் பனையூர் அலுவலகத்தில் சென்று புதுபிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மனக்கசப்பு நீடித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக அன்புமணி ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement