For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை... #Rajinikanth படங்களால் கொலு வைத்த ரசிகர்!

08:45 AM Oct 05, 2024 IST | Web Editor
அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை     rajinikanth படங்களால் கொலு வைத்த ரசிகர்
Advertisement

நடிகர் ரஜினியின் ரசிகர் ஒருவர் ரஜினியின் உடல்நலன் வேண்டியும், நவராத்திரியை முன்னிட்டும், அபூர்வ ராகங்கள் முதல் கூலித் திரைப்படம் வரை உள்ள ரஜினி படங்களை வைத்து நவராத்திரி கொலுவை கொண்டாடியுள்ளார்.

Advertisement

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக். இவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். இவர் ரஜினியை தனது கடவுளாகவும், குலதெய்வமாகவும் வழிபட்டு வருகிறார். தனது வீட்டிலேயே ரஜினிக்கென கோயில் ஒன்றை அமைத்துள்ளார். அதில் கருங்கல்லால் ஆன 250 கிலோ எடை கொண்ட ரஜினியின் சிலையை வைத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார். தினமும் பால், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து தனது குடும்பத்துடன் பூஜை செய்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், நவராத்திரி கொலுவை முன்னிட்டும் தனது வீட்டில் உள்ள ரஜினி கோயிலில் நவராத்திரி கொலு வைத்துள்ளார். இதில் வெள்ளை சிமெண்ட், களிமண்களால் ஆன ரஜினி புகைப்படம் பொருந்திய பொம்மைகள் வைத்து, அதாவது ரஜினி இதுவரை நடித்துள்ள 171 படங்கள் வரை, அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை உள்ள ரஜினியின் புகைப்படங்கள் வைத்து கொலு ஏற்பாடு செய்துள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கூறியதாவது, “தலைவர் உடல்நிலை சீராக வேண்டும். மன அமைதியுடன் அவர் வாழ வேண்டும். இந்த கொலுவில் தினசரி பூஜை நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. ரஜினியின் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதும். அவரது செய்தி தொடர்பாளர் அண்மையில் தொலைபேசியில் அழைத்து பேசினார். கூடிய விரைவில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். அவரை சந்திப்பதை விட அவர் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர் ஓய்வு எடுப்பதுமே எங்களுக்கு முக்கியம்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advertisement