For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நான்காவது T20 போட்டி : ஆஸ்திரேலியா வெற்றிபெற 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது போட்டியில்இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது.
04:06 PM Nov 06, 2025 IST | Web Editor
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது போட்டியில்இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது.
நான்காவது t20 போட்டி   ஆஸ்திரேலியா வெற்றிபெற 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Advertisement

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் டி20 போட்டிகள் துவங்கியுள்ளன. அதன் படி முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

Advertisement

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹெரிடேஜ் பேங்க் ஸ்டேடியத்தில் நடந்து  வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுபமன் கில் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 28 ரன்களும் விளாசினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது.

Tags :
Advertisement