For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு!

06:40 AM Jul 17, 2024 IST | Web Editor
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
Advertisement

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலி சான்றிதழ் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக யுவராஜ், பிரவீண், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 9-ம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் தானும் சேர்க்கப்படலாம் என்ற அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு கடந்த மாதம் 12-ம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சார்பதிவாளர் அளித்த நில மோசடி புகார் வழக்கு கடந்த மாதம் 14-ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் ஷோபனாவின் தந்தை பிரகாஷ் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி புகார் அளித்தார்.

இவ்வழக்கு வாங்கல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 22-ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது சிகிச்சையின்போது தான் உடனிருக்கவேண்டும் எனக்கூறி கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கேட்டு மீண்டும் ஜூலை 1-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சார் பதிவாளர் அளித்த புகாரில் இடம் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் மணல்மேடு தாளப்பட்டியில் உள்ள யுவராஜ் வீடு, தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ், கவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் கடந்த 5-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 5 வாரங்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கேரளாவில் நேற்று கைது செய்தனர். அவரை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் விசாரணை நீண்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியே வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் "அரசியல் பழிவாங்கும் வழக்கு என்றும், நீதிமன்றத்தில் சந்திப்போம்" என்றும், தான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றச்சாட்டுக்களை வைத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பிரவீன் என்பவரையும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் ஆவணங்களை தயார் செய்த பின்னர், கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன்
ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதனை
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில்
அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.பிரவீன் குளித்தலை கிளைகிளை சிறைக்கு அழைத்து சென்றனர்.இருவருக்கு 31 ந் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு விட்டார். இந்நிலையில் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பு வழக்குரைஞர் மனு தாக்கல் செய்தார் இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

Tags :
Advertisement