For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது அவரது மனைவி பீலா வெங்கடேசன் புகார்!

05:40 PM May 21, 2024 IST | Web Editor
முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது அவரது மனைவி பீலா வெங்கடேசன் புகார்
Advertisement

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது அவரது மனைவி பீலா வெங்கடேசன் கேளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

Advertisement

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனைவி பீலா வெங்கடேசன். இவர் ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதோடு தாஸ் என்று தனது பெயரில் உள்ள இரண்டாம் பெயரை நீக்கியும் அவர் செய்தி நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார். இவர்களின் விவாகரத்து தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜேஷ் தாஸ் மீது பீலா ஐஏஎஸ் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பியூலா வெங்கடேசனுக்கு சொந்தமான வீட்டில் ராஜேஷ் தாஸ் அத்துமீறி உள்ளே நுழைய முயன்றதாகவும், நுழைந்தபோது அனுமதிக்காத செக்யூரிட்டியின் செல்போனை பிடுங்கி சென்றதாகவும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பியூலா ராஜேஷ் புகார் அளித்துள்ளார். மேலும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று ராஜேஷ் தாஸ் தனது வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டாம் என எழுதி கொடுத்ததாகவும் பியூலா வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பியூலா வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ்  ராஜேஷ் தாஸின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Tags :
Advertisement