For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!

11:08 AM Dec 08, 2023 IST | Web Editor
தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி
Advertisement

தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ்  உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் கிழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்,  அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் , “ தந்தை லேசான காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் உங்கள் அன்பு மூலம் அவர் விரைவில் குணமடைவார்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement