For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோடில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு!

10:19 AM Apr 12, 2024 IST | Web Editor
ஈரோடில் உடல் நலக்குறைவால் பெண் யானை உயிரிழப்பு
Advertisement

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே உடல் நலம் குன்றி விழுந்த பெண் யானை  உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில்
வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.  அப்போது பண்ணாரி வனப்பகுதி ஒட்டி குய்யனூர் அருகே வனத்திற்குள் யானை ஒன்று பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து,  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு சென்ற பார்த்த போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கீழே விழுந்து கிடந்ததுள்ளது. மேலும்,  அதன் அருகே குட்டியானை ஒன்று இருந்தது.

இதையும் படியுங்கள் : மயிலாடுதுறையிலிருந்து அரியலூர் செந்துறை பகுதியில் தஞ்சம் அடைந்த சிறுத்தை?... 

இது தொடர்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்
கொடுக்கப்பட்டது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.  பின்னர்,  வன கால்நடை மருத்துவர் மூலம் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பெண் யானையின் குட்டி,  தாய் யானையை சுற்றி சுற்றி வந்தது.  இதனால்
சிகிச்சை அளிக்கும் முடியாமல் வனத்துறையினர் தினரினர்.  பின்னர்,  வன ஊழியர்கள் அந்த குட்டி யானையை அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர்.  அதன் பிறகு வனத்துறையினர் அந்த பெண் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் இளநீர்,  வாழைப்பழம் ஆகியவற்றை கொடுத்து சிகிச்சை அளித்தனர்.  ஆனால், உடல் நலம்குன்றி விழுந்த பெண் யானை நேற்றிரவு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பதில் கடும் வறட்சி ஏற்பட்டு வனப்பகுதி
முழுவதும் செடி கொடிகள் மரங்கள் காய்ந்து காணப்படுவதால் தாவர உண்ணி
விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடுகளும், வனக் குட்டைகள் நீர்நிலைகள்
வறண்டு காணப்படுவதால் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் யானைகள் தண்ணீர், உணவு தேடி கிராம பகுதிக்குள் நுழைவது தொடர்
கதையாக உள்ள நிலையில் தற்போது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பண்ணாரி
வனப்பகுதியில் ஒரு பெண் யானையும் ,கடம்பூர் மலைப்பகுதி குரும்பூர் மலை
கிராமத்தில் ஒரு பெண் யானையும் பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் ஒரு பெண் யானை உயிருக்கு போராடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பெண் யானைகள் உயிரிழப்புகள்
ஏற்பட்டு வருவதால் தற்போது யானைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனவே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் யானைகள் மீது கவனம்
செலுத்தி வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனக் குட்டைகளில் நீர் நிரப்ப வேண்டும் மற்றும் செயற்கை குட்டைகள் அமைக்க வேண்டும் என வனவிலங்குகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement