Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடும்ப அட்டை சென்னையில் இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் - வெளியான புதிய தகவல்!

11:54 AM Dec 13, 2023 IST | Jeni
Advertisement

குடும்ப அட்டை சென்னையில் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தால், அவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு, அதிகாரிகள் ஆய்வு செய்து,  உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால்,  வெள்ள நிவாரண தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.  மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு,  கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், இன்னும் சில பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிடவும் உத்தரவிட்டிருந்தார்.

 

இதையடுத்து எந்தெந்த பகுதிகளுக்கு நிவாரணம் என்பது குறித்து சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என தகவல் வெளியானது. மேலும் ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில், பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள் : கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் - பொதுமக்கள் அச்சம்..!

இந்நிலையில்,  புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை சென்னையில் இல்லாமல் பிற மாவட்டத்தில் இருந்தால்,  அவர்களுக்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  அந்த விண்ணப்பத்தில் வங்கி எண் மற்றும் அவர்கள் வாழ்ந்த பகுதியின் பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்தால்,  அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
CyclonefundMichaungReliefTNGovt
Advertisement
Next Article