Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை வந்த விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை! 43 வயது மதிக்கத்தக்க நபர் கைது!

04:50 PM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

டெல்லி - சென்னை விமானத்தில் வந்த பெண் பயணிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசா கைது செய்தனா்.

Advertisement

டெல்லியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 164 பயணிகளுடன் கடந்த (09.10.2024) வந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்தில் பயணித்த, சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (43), தனது முன் இருக்கையில் அமா்ந்திருந்த சென்னை சவுகாா்பேட்டையைச் சோ்ந்த, 37 வயது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, விமானம் சென்னையில் தரையிறங்கியதும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, ராஜேஷைப் பிடித்து விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷைக் கைது செய்தனர்.

கடந்த 9-ந்தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

Tags :
arrestedChennaicomplaintDelhiflightinappropriately touchedMeenambakkamnews7 tamilsexual harrasment
Advertisement
Next Article