Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான்” - அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் என உலக தந்தையர் தினத்தில் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12:10 PM Jun 15, 2025 IST | Web Editor
தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் என உலக தந்தையர் தினத்தில் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கும் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீபத்திய பாமக நிகழ்ச்சி ஒன்றில் அன்புமணி ராமதாஸ், தனது தந்தையை பாமகவின் குலசாமி என்று பேசியிருந்தார். அதற்கு எதிர்மறையாக ராமதாஸ், குலசாமி என்று சொல்லி நெஞ்சில் குத்துகிறார்கள், மூச்சு அடங்கும் வரை நானே பாமக தலைவர் என்று பேசினார்.

Advertisement

இந்த மோதலின் வெளிப்பாடாக அன்புமணி பாமக ஆதரவாளர்களை ராமதாஸ் தொடர்ந்து நீங்கி அறிக்கை வெளியிட்டு வந்தார். அதன் பின்னர் நீக்கியவர்களை  அதே பொறுப்பில் நியமித்து அன்புமணியும் அறிக்கை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் உலக தந்தையர் தினமான இன்று(ஜூன்.15) தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் என அன்புமணி மணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம்! தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது  தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்”

இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags :
ANBUMANIfathers dayPMKRamadoss
Advertisement
Next Article