For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலருக்கு தங்க மோதிரம் - பரிசாக அறிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம்!

08:15 PM Jun 08, 2024 IST | Web Editor
கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலருக்கு தங்க மோதிரம்   பரிசாக அறிவித்த தந்தை பெரியார் திராவிடர் கழகம்
Advertisement

மண்டி தொகுதி பாஜக எம்.பி., கங்கனா ரானாவத்தின் கன்னத்தில் அறைந்த பாதுகாப்பு படை அதிகாரி குல்விந்தர் கவுர்-க்கு,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரத்தை பரிசாக அறிவித்துள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது.  இதனையடுத்து வரும் ஜூன் 9 ஆம் தேதி மோடி பிரதமராக ஆட்சி அமைக்கவுள்ளார்.  இதுதொடர்பாக நேற்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றார்.   அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும்,  அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை பெண் அதிகாரி குல்விந்தர் கவுர்-க்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

அப்போது திடீரென அந்த அதிகாரி,  கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தீவிரவாதிகள் என விமர்சித்ததற்காக இந்த தாக்குதலை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  இந்த நிலையில்,  கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த மத்திய பாதுகாப்பு படை பெண் காவலருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement