Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் 'மகாபஞ்சாயத்' | போலீசார் குவிப்பு!

08:01 AM Mar 14, 2024 IST | Web Editor
Advertisement

தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெறுகிறது. 

Advertisement

வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதில் சில விவசாயிகளும் உயிரிழந்தனர்.

மத்திய அரசுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மீண்டும் விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்தனர். இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தடைகளை மீறி முன்னேறிச் சென்ற விவசாயிகளை போலீசாரும்,  துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். போலிசார் நடத்திய தாக்குதலில் இளம் விவசாயியான சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதன் காரணமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த மார்ச் 3-ம் தேதி செய்தியாளர்களிடம், “டெல்லி நோக்கிய பேரணி முடிவை திரும்ப பெற போவதில்லை. எல்லையில் விவசாயிகளின் பலத்தை மேலும் அதிகரித்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். மார்ச் 6 ஆம் தேதி, பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி வர உள்ளனர். மார்ச் 10-ம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

அதன்படி, விவசாயிகள் நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடட்டனர். இந்நிலையில்,  இன்று டெல்லியில் மகாபஞ்சாயத்து நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். மகாபஞ்சாயத்து என்பது அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஒன்றுகூடி பேசுவதாகும். அந்த வகையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் மகாபஞ்சாயத்தில் சுமார் 50,000க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) அகில இந்திய கிசான் மஸ்தூர் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் கூறியுள்ளன.

மகாபஞ்சாயத்து காரணமாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, காவல்துறை போக்குவரத்து மாற்றம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பைக், காரில் செல்வதை காட்டிலும், மெட்ரோ ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தில் பயணித்தால் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Tags :
DelhiDelhi ChaloFarmers ProtestNation wide
Advertisement
Next Article