For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓய்வை அறிவித்தார் பிரபல டென்னிஸ் வீரர் #RafaelNadal!

06:01 PM Oct 10, 2024 IST | Web Editor
ஓய்வை அறிவித்தார் பிரபல டென்னிஸ் வீரர்  rafaelnadal
Advertisement

பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement

ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இந்த சூழலில், இவர் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும், டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டிதான் இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஃபேல் நடால் பேசியதாவது,

"நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. அனைவரும் ஒரு நாள் இந்த முடிவை எடுக்கதான் வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு மிகவும் கடினமாகதான் இருந்தது.

இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் உள்ளது. என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கோப்பைக்காக விளையாடவுள்ளேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணி, அம்மா, அப்பா, மாமா, என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய ரசிகர்களாகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்."

இவ்வாறு டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement