For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உதகை மற்றும் கொடைக்கானலில் #EPass நடைமுறை நீட்டிப்பு!

08:38 AM Oct 01, 2024 IST | Web Editor
உதகை மற்றும் கொடைக்கானலில்  epass நடைமுறை நீட்டிப்பு
Advertisement

நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்ட மற்றும் மாநில சுற்றுலா பயணிகள்  வர இ - பாஸ் நடைமுறை தொடரும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

Advertisement

நீதிமன்ற உத்தரவுபடி மலை மாவட்டங்களான கொடைகானல் மற்றும் நீலகிரிக்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வர இ- பாஸ் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்றோடு இ பாஸ் நடைமுறை நிறைவடையும் நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் வருகை தரும் சுற்றுலா பயணிகள் 07.05.2024 முதல் இ-பாஸ் பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இது நாள் வரை இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வரும் நிலையில், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறையினை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு www.epass.tnega.org என்ற இணையதளம் மூலம் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்திற்குள் வருகை தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் இ-பாஸ் சரிபார்ப்பு பணிக்காக வாகனங்களை நிறுத்தி சரிபார்ப்பிற்கு பிறகு நீலகிரிa மாவட்டத்திற்குள் நுழைய கேட்டுக்கொள்ளப்படுவதுடன் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பினை நல்குமாறு அனைத்து பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement