For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு கொடுக்கப்படுகிறது" - எடப்பாடி பழனிச்சாமி!

திமுக ஆட்சியில் பொதுமக்கள் கொந்தளிப்பை மடைமாற்றம் செய்யவே என்னை பற்றி கேலிச் சித்திரம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
11:19 AM Jun 21, 2025 IST | Web Editor
திமுக ஆட்சியில் பொதுமக்கள் கொந்தளிப்பை மடைமாற்றம் செய்யவே என்னை பற்றி கேலிச் சித்திரம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
 தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு கொடுக்கப்படுகிறது    எடப்பாடி பழனிச்சாமி
Advertisement

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "நேற்றைய தினமே, கீழடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், நேற்றைய தினம் கீழடி குறித்து தெளிவாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கழகத்தினுடைய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமாக கீழடி அகழாய்வு குறித்து தெளிவான பதில் கொடுத்துள்ளார்.

Advertisement

அம்மா இருக்கும்போது என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள், அம்மா மறைவுக்கு பின் அம்மா அரசு கீழடி அகழாய்வு ஆராய்ச்சி எப்படி நடடுத்தப்பட்டது என்ற விளக்கத்தை நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளிலும் செய்தி வந்துள்ளது.

முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஒவ்வொரு அமைப்பும் அவரவர் விருப்பப்படி தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் அவரவர் விரும்புகின்ற கடவுள்களை இன்றைக்கு மாநாட்டின் மூலமாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள். மதுரையில் மாநாட்டை நடத்துகின்றனர் அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், ஆங்கிலம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தொடர்பான கேள்விக்கு, அமித்ஷா அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு, தாய்மொழி என்பது முக்கியம். அனைவருக்கும் தாய்மொழி என்பது மிக முக்கியம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி தான் இதனை சொல்லி உள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர்கள் ஆபாசமாக பேசுவது பற்றி நாங்கள் ஏற்கனவே கண்டன அறிக்கை கொடுத்துள்ளோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை மக்களிடத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை மடைமாற்றம் செய்ய அவதூறு செய்திகள் வெளியிடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவார்கள் உடல் ஆரோக்கியத்திற்கு யோகா மிக முக்கியம் பாரத பிரதமர் அவர்கள் அதனை வலியுறுத்தியே யோகாவின் நன்மையை எடுத்துரைத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement