For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | முதல் சுற்றில் திமுக முன்னிலை!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக முன்னலை பெற்றுள்ளது.
09:00 AM Feb 08, 2025 IST | Web Editor
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக முன்னலை பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்   முதல் சுற்றில் திமுக முன்னிலை
Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisement

இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 17 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. இதில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 7,961 வாக்குகளும், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம், முதல் சுற்றில் திமுக முன்னலை பெற்றுள்ளது.

Tags :
Advertisement