சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
10:19 AM Sep 02, 2025 IST | Web Editor
Advertisement
சென்னையில் கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்திற்கு 2 வாகனங்களில் வந்த 8 அதிகாரிகள் அரவிந்த் என்பவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய 2 போலிஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.