For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் பத்திர நன்கொடை - அதிமுகவிற்கு ரூ.5 கோடி வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!

07:00 PM Mar 17, 2024 IST | Web Editor
தேர்தல் பத்திர நன்கொடை   அதிமுகவிற்கு ரூ 5 கோடி வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்
Advertisement

தேர்தல் பத்திரத்தின் மூலம் சென்னை சூப்பட் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிமுகவிற்கு நிதி அளித்த போது அதிமுகவின் பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இருந்ததாக அதிமுக தெரிவித்துள்ளது. 

Advertisement

தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அது தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் அதிமுக எவ்வளவு நிதி பெற்றது என்பது குறித்த விவரங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் செலவு பிரிவு செயலாளர் வினோத்குமாருக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தற்போது அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் அதிமுகவுக்கு வந்த 6 கோடியில் 5 கோடி ரூபாய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொடுத்துள்ளது.

இதுதவிர லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனமும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.1 கோடியை அதிமுகவுக்கு நிதியாக அளித்துள்ளது. சென்னையை சேர்ந்த கோபால் ஸ்ரீனிவாசன் என்பவர் அதிமுகவுக்கு ரூ.5 லட்சத்தை தேர்தல் பத்திரம் மூலம் நிதியாக அளித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிமுகவுக்கு நிதி அளித்தபோது அதிமுகவின் பொருளாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  இருந்ததாக  அதிமுக குறிப்பிட்டுள்ளது.

Tags :
Advertisement