For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஈரோட்டில் 4 தலைமுறை குடும்பத்தினருடன் 100-வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்!

03:04 PM Dec 11, 2023 IST | Web Editor
ஈரோட்டில் 4 தலைமுறை குடும்பத்தினருடன் 100 வது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்
Advertisement

ஈரோட்டில் முதியவர் ஒருவர் 4 தலைமுறை குடும்பத்தினருடன் சேர்ந்து 100-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் குமரகுரு என்பவர் தனது மனைவி லட்சுமியம்மாளுடன்
வசித்து வருகிறார்.  குமரகுருவிற்கு இன்று 100-வது பிறந்த தினம்.  அதனை கொண்டாட
பேரன்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.  இதில் 4 தலைமுறை குடும்பத்தினருடன்
ஒன்று கூடினர்.   அனைவரும் கேக் வெட்டி குமரகுருவின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்: செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்

முன்னதாக அனைவரும் புத்தாடைகள் அணிந்து,  இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.  பின்னர் குமரகுரு,  லட்சுமியம்மாள் தம்பதியினரின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.  பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தினர் ஒன்றுகூடியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அனைவரும் தெரிவித்திருந்தனர்.

Tags :
Advertisement