For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - மக்கள் அச்சம் !

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
01:58 PM Feb 22, 2025 IST | Web Editor
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்   மக்கள் அச்சம்
Advertisement

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

Advertisement

முதல் முறையாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக பதிவானது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது முறை ரிக்டர் அளவில் 4.2 அலகுகளாக இன்று அதிகாலை 4.33 மணிக்கு 150 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நடுக்கமும் அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்டதால், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement