For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திபெத்தில் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம் !

திபெத்தில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:33 AM Mar 09, 2025 IST | Web Editor
திபெத்தில் நிலநடுக்கம்   பொதுமக்கள் அச்சம்
Advertisement

சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது திபெத்தில் கடந்த ஜனவரி 7ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Advertisement

இந்நிலையில், திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காலை 2.30 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.05 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 88.16 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Tags :
Advertisement