For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
09:56 AM Feb 28, 2025 IST | Web Editor
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்
Advertisement

மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அந்த பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.

Advertisement

இந்த நிலையில் செபி தலைவர் மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் இன்றுடன் (பிப்.28) நிறைவடையும் நிலையில், மத்திய அரசு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டேவை நியமித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு வெளியிடப்பட்ட அரசாணையில், "மத்திய நிதி மற்றும் வருவாய் துறைச் செயலராக உள்ள துஹின் காந்த பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பதவியேற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இவர் இப்பதவியை வகிப்பார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987-ஆம் ஆண்டின் ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்த பாண்டே, நிதியமைச்சகத்தில் வருவாய் துறையைக் கையாளும் மிக மூத்த அதிகாரியாக பணி புரிந்து உள்ளார். பல்வேறு அரசுத் துறைகளில் பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். அவர் கடந்த செப்டம்பர் 2024 இல் நிதிச் செயலாளராக பணியாற்றினார்.

அதற்கு முன்பு, நிதி அமைச்சகத்தின் கீழ் வருவாய்த் துறையை வழிநடத்தினார். அதற்கு முன்னதாக பொது நிறுவனங்கள் துறை (DPE), பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (DIPAM) ஆகியவற்றில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement