Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராகி மாவுக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல்! -  ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!

10:53 AM Mar 13, 2024 IST | Web Editor
Advertisement
ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்ற சதானந்த்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

 

Advertisement

டெல்லியில் கடந்த மாதம் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  தொடர்ந்து,  அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும்,  திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரிய வந்தது.

இந்நிலையில் மார்ச் 9 ஆம் தேதி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிடம் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக,  மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனிற்கு ஜாபர் சாதிக்கை அழைத்து சென்று மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  நியூசிலாந்து,  ஆஸ்திரேலியா,  மலேசியாவிற்கு போதைப்பொருளை ஜாபர் சாதிக் கடத்தி இருந்தது விசாரணையில் ஏற்கனவே தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து,  ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கும் ஜாபர் சாதிக் போதைப்பொருளை கடத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  அதனை மையமாக வைத்து அதிகாரிகள் ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதா என்ற சதானந்த்தை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.  திருச்சியைச் சேர்ந்த அவர் திருச்சி மற்றும் சென்னையில் ராகி மாவில் போதைப் பொருளை கலப்படம் செய்து கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags :
ArrestChennaiDrugsJaffer SadiqNCBtamil nadu
Advertisement
Next Article