For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் கவனத்திற்கு!

குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக, 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் அறிவித்துள்ளது.
04:58 PM Jul 30, 2025 IST | Web Editor
குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக, 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் அறிவித்துள்ளது.
சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்   பொதுமக்கள் கவனத்திற்கு
Advertisement

Advertisement

சென்னை, ஜூலை 30, 2025 - குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் காரணமாக, இன்று (ஜூலை 30) முதல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 01) இரவு 10 மணி வரை சென்னை மாநகரின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் (CMWSSB) அறிவித்துள்ளது.

இந்த குடிநீர் விநியோகத் தடையால், அண்ணா நகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார், தாம்பரம் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்படும்.

குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் இந்த மூன்று நாட்களுக்குத் தேவையான தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குழாய் இணைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement