For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெண்ணின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்! - ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!

03:11 PM Jul 21, 2024 IST | Web Editor
பெண்ணின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட 77 ஊசிகள்    ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்
Advertisement

ஒடிசா மாநிலத்தில் பெண்ணின் தலையிலிருந்து 77 ஊசிகளை அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது.

இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டில் இவர் சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அதன்பிறகு சில காலம் எந்த பிரச்னையும் இல்லாமல் ரெஷ்மா வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், திடீரென தலையில் தாங்க முடியாத வலி ஏற்பட்டு பீமா போய் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரெஷ்மா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலை பகுதியில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் ரெஷ்மா தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் :சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் – ராயப்பேட்டையில் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரெஷ்மா தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் எடுக்கப்பட்டன. ஆனால், அவரது உடல்நிலையில், மாற்றம் இல்லாததால் வீர் சுரேந்திர சாய் மருத்துவமனைக்கு (விம்சார்) பரிந்துரைக்கப்பட்டார். விம்சார் மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் ரெஷ்மா தலையில் இருந்து மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின்னர், ரெஷ்மா நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
Advertisement