For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும்” - நடிகை கௌதமி பேட்டி

திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும் என நடிகையும் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார்.
03:18 PM Jun 09, 2025 IST | Web Editor
திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும் என நடிகையும் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார்.
“திமுக தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு தக்க பாடம் புகட்ட வேண்டும்”   நடிகை கௌதமி பேட்டி
Advertisement

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது, “ஆண்டாளின் அழைப்பின் பெயரில் எதிர்பாராமல் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்.

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மீண்டும் தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேசிய வார்த்தைகளின் அர்த்தம் பின்னணி குறித்து இந்த நேரத்தில் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி முடிவான பின்னர் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் தான் நடைபெறும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மிக உறுதியாக இருக்கிறார். அதை நேற்று ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை வரவேற்பதா அல்லது போனால் போகட்டும் என‌ பொறுத்து விட்டு விடவா என தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இணைய வேண்டும் என்பதை எடப்பாடி பழனிசாமி சரியாக முடிவெடுப்பார்.

2026 தேர்தலை பொருத்தவரை கூடுதலான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது. அடுத்த தேர்தலில் திமுகவை தலை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவுக்கு முடிவு செய்தால்தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நியாயமான மக்களாட்சி கொண்டு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இயலும். எடப்பாடி பழனிசாமி  மிகத் தெளிவாக இருக்கிறார். கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்து” இவ்வாறு அவர் பேசினார்,

Tags :
Advertisement