For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி கொலை - போலீசார் விசாரணை!

08:49 AM May 24, 2024 IST | Web Editor
திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டி கொலை   போலீசார் விசாரணை
Advertisement

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் அடையாளம் தெரியாத மர்ம நம்பர்களால் வெட்டி
படுகொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் மாயாண்டி ஜோசப் (60). இவர் திண்டுக்கலை அடுத்துள்ள வேடப்பட்டியில் வசித்துவந்தார். இவர் திமுக பிரமுகராவார். இவரது மனைவி நிர்மலா. இவர் முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் நிர்மலா உடல் நலம் சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் பார் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று (மே.23) இரவு யாகப்பன் பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து, வேடப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர் திரையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த மாயாண்டி ஜோசப் மீது மோதினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

தொடர்ந்து, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் மாயாண்டி ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாயாண்டி ஜோசப் மீது கொலை உட்பட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்பகை காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணத்திற்காக கொலை நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement