For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுக என்பது ஒரு ஆலமரம்… காய்த்த மரம்தான் கல்லடி பட வேண்டும்!" – விஜய் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில்!

09:32 PM Oct 27, 2024 IST | Web Editor
 திமுக என்பது ஒரு ஆலமரம்… காய்த்த மரம்தான் கல்லடி பட வேண்டும்   – விஜய் விமர்சனத்திற்கு ஆர் எஸ் பாரதி பதில்
Advertisement

காய்த்த மரம்தான் கல்லடி பட வேண்டும் என தவெக தலைவர் விஜயின் விமர்சனத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.

Advertisement

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில் பேசிய விஜய், மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள். அவங்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா?. பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள். அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான். வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?" இவ்வாறு பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள் : அரசியல் எதிரி யார்? கொள்கை எதிரி யார்? #TVKMaanaadu-ல் விஜய் சொன்ன விளக்கம்!

இதனிடையே, தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆர்.எஸ். பாரதி கூறியதாவது :

"திமுக என்பது ஒரு ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது பழமொழி. யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது. வார்த்தைக்கு… வார்த்தை பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதேபோல் யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் விமர்சிப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம் தக்க பதிலடி கொடுப்போம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement