For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சாமானிய மக்களுக்கு திமுக ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது" - அண்ணாமலை விமர்சனம்!

சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
03:02 PM Mar 14, 2025 IST | Web Editor
 சாமானிய மக்களுக்கு திமுக ஏமாற்றத்தையே  பரிசளித்திருக்கிறது    அண்ணாமலை விமர்சனம்
Advertisement

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 14) தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மார்ச் 17-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

Advertisement

மார்ச் 21-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும். நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement